• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் அருகே 2 குழந்தைகளை கொன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

July 13, 2018 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் அருகே பூமலூர் முன்னாள் ஊராட்சித்தலைவரும் திமுக பிரமுகருமான செந்திலின் மனைவி சிவரஞ்சனி.இவருக்கு 5 வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் விரக்தியடைந்த சிவரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

அப்போது தனக்கு பிறகு தனது குழந்தைகள் தவிக்க கூடாது என்று எண்ணி சிவரஞ்சனி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இரண்டு குழந்தைகளையும் அமுக்கி கொன்றுள்ளார்.பின்னர்,வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை ஊற்றி தானும் தீ வைத்து கொளுத்திக் கொண்டார்.இதில் சிவரஞ்சனி உடல் முழுவதும் கருகிய நிலையில் பலத்த காயமடைந்தார்.

அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் தீக்காயங்களுடன் சிவரஞ்சனி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க