• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவி உயிரிழப்பு தொடர்பாக யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் வேலுமணி

July 13, 2018 தண்டோரா குழு

கோவையில் மாணவி லோகேஸ்வரி உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை விசாரித்து வருவாதகவும், கல்லூரி நிர்வாகம் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவிலான 18 வது,அக்ரி இன்டெக்ஸ் -2018 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.இதன் துவக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“கோவை கலைமகள் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது எதிர்பாராத செயல் என்றும், கண்டிக்கதக்க கூடிய செயல் எனவும் தெரிவித்தார்.மேலும் வீடியோவில் அந்த மாணவியை வற்புறுத்தி தள்ளிவிடுவது தெரிகிறதாகவும்,இது மோசமன செயல் என கண்டனம் தெரிவித்தார்.இது போன்ற கடுமையான செயல்கள் மேற்கொள்ள கூடாது எனக் கூறிய அவர்,இம்மாதிரி பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் விருப்பப்பட்டு பயிற்சி மேற்கொள்கிறார்களா என பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.மேலும்,கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு
காவல்துறை விசாரித்து வருவதாகவும்,யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

மேலும் படிக்க