• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கா? – நடிகை ஸ்ரீரெட்டி டுவீட்

July 11, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

இதுமட்டுமின்றி இவர் சில நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில்,இவர் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் குறித்து பேசி வருகின்றார்.இதற்கிடையில்,இவர் அளித்த ஒரு பேட்டியில்,தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு.மிகபெரிய இயக்குநர் ஒருவர் படவாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.நேரம் வரும் போது அதைப்பற்றி கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.

இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில்,தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்,‘என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் உள்ளதா?வெள்ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம்.எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தீர்கள்.நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை.ஆம் நிறைய ..?‘நீங்கள் நல்ல மனிதர்’என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க