• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் – உச்சநீதிமன்றம்

July 11, 2018 தண்டோரா குழு

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தாஜ்மகாலை பாதுகாக்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசு தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த தொலைநோக்கு திட்ட அறிக்கையை ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.ஆனால்,தொலைநோக்கு திட்ட அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு சமர்ப்பிக்கவில்லை.இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

பாரிஸில் டிவி டவரை போன்று இருக்கும் ஈபிள் டவரை விட தாஜ்மஹால் மிக அழகானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செல்வதால் உங்களின் வெளிநாட்டு பரிவர்த்தனை பிரச்னையையும் தீர்க்கும்.உங்களின் அலட்சியத்தால் நாடு தனது மதிப்பை இழந்து வருவது உங்களுக்கு புரியவில்லையா?பலமுறை எச்சரித்தும் தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா? காற்று மாசுபாட்டால் தாஜ்மஹால் தனது பொழிவை இழந்து வருவதாகவும்,பழுப்பு நிறத்திற்கு மாறி வருவதாக பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.

தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய,மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவது இல்லை. தாஜ்மகாலை காக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் அதை மூடிவிடுவோம் அல்லது நீங்களே அதை இடித்துத் தள்ளுங்கள் என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

மேலும்,இந்தியாவின் நினைவுச் சின்னமான தாஜ்மகால் மாசுபட காரணம் என்ன,அதனை தடுப்பது எவ்வாறு என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் இந்த வழக்கை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள்,அன்றைய தினம் தாஜ் டிரெபீசியம் சோனின் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க