• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை குற்றலாம் அருவிக்கு செல்லத் தடை

July 10, 2018 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால்,மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக,மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு,சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.அணையின் மொத்த கொள்ளளவான 50 அடிக்கு,தற்போது 47.5 அடியாக உயர்ந்துள்ளது நிலையில்,அணை நிரம்பி வழிய இன்னமும் 2.5 அடி உயரமே உள்ளது.

மேலும் படிக்க