• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூ8.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

July 9, 2018 தண்டோரா குழு

கோவை தமாஸ் வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் ரூ8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயா லலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வீட்டை குடோனாக மாற்றி செயல்பட்ட வந்த அந்த கட்டிடத்தின் அறைகளில் சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 20 மூட்டைகளிலான ஹான்ஸ்,பான் பாக்கு,குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.கட்டிட உரிமையாளர் மெக்ராஜ் என்பவரை பிடித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,வாசனை வராதவாறு ஊதுபர்த்தியுடன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.கோவை சூலூர் பகுதியில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த வாரம் இதே தாமஸ் வீதி,ராஜவீதி,தர்மராஜா கோயில் வீதி மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 2ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க