• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்பயா பாலியல் கொலை வழக்கின் தண்டனை குறித்து கிரண்பேடி டுவீட்

July 9, 2018 தண்டோரா குழு

நிர்பயா பாலியல் கொலை வழக்கை திறம்பட கையாண்ட டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் இறுதியில் நீதி வென்றுள்ளது.இதுபோன்ற அரிதினும் அரிதான வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கைத் திறம்படக் கையாண்ட அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார் மற்றும் அவரது திறமையான சகாக்களுக்கு நன்றி.நீதித்துறை மற்றும் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்க இது மிகச் சிறந்த வழக்காகும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க