• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு

July 6, 2018 தண்டோரா குழு

சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும்,நடிகருமான மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரது காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது,கார் வேகமாக சென்றதால் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார்,தடுத்து உள்ளே இருந்த மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது இதில் அவர் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர். மேலும்,அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க