• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டபேரவையில் டிஜிபி நியமனம் குறித்து ஸ்டாலின் கேள்வி – முதல்வர் விளக்கம்

July 5, 2018 தண்டோரா குழு

டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது முரணாக உள்ளது.டிஜிபி நியமனத்தை ரத்து செய்து,புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி பதவி நீட்டிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.டி.ஜி.பி நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. டி.ஜி.பி பதவி நீடிப்பு காரணமாக பல காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பியாக பதவி உயர்வுகள் பெறாமலே ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த விவகாரத்தில் அரசு தான் செய்த தவறை உணர்ந்து டி.கே.ராஜேந்திரன் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் டி.ஜி.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரகாஷ் சிங் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.இதனை,அரசு வருங்காலங்களில் பின்பற்றும்.உச்சநீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்புகளை அடிப்படையாக கொண்டு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் படிக்க