கோவை விமான நிலையத்தின் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணி கொண்டு வந்த உருளை வடிவில் உலோகம் ஓன்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.கைப்பற்றப்பட்ட அந்த உலகத்தை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமல்ராஜை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த உருளையை ஆய்வு செய்த போது,உருளையின் உட்பகுதியில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அமல்ராஜை கைது செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்,கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 15 லட்சம் ருபாய் எனவும்,இது 3.6 கிலோ எடையில் இருந்ததாகவும் வருவாய் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்