• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலைய விரிவாக்கம்:இழப்பீடு தரவில்லை துண்டு பிரச்சுரம் வழங்கிய இருவர் கைது

July 3, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையாக இழப்பீடு தரவில்லை என துண்டு பிரச்சுரம் வழங்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை என ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையான இழப்பீட்டினை அரசு வழங்கவில்லை எனவும்,இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க கோரி துண்டு பிரச்சுரம் வழங்கிய இருகூரை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெயப்பிரகாஷ்,அமமுக உறுப்பினர் செந்தில்ராஜ் ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிமுகவை சேர்ந்த தேவராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில்,அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியது,மக்களை தூண்டிவிட்டது ஆகிய பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் இருவரையும் வருகின்ற 17 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.

மேலும்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துண்டுதலின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,பாரபட்சமான முறையில் இழப்பீடு வழங்காமல் முறையாக இழப்பீடு வழங்க கோரியதற்காக கைது செய்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட ஜெரபிரகாஷின் மனைவி வைரமணி தெரிவித்தார்.இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க