• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

July 3, 2018 தண்டோரா குழு

கோவையில் ஏடிஎம் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்த 6 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன்,வாசு மற்றும் சென்னையை சேர்ந்த நிரஞ்சன்,இலங்கை அகதி லவசாந்தன்,திருச்சியை சேர்ந்த கிஷாக்,திருப்பூரை சேர்ந்த மனோகரன் 6 பேரையும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர்.மேலும்,கைது செய்யப்பட்ட இவர்களை வரும் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க