June 30, 2018
தண்டோரா குழு
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன். இப்படத்தில் இடம்பெற்ற ’உனைக் காணாத நாள்’ என தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சங்கர் மகாதேவன் பாடியிருந்த இப்பாடலை முகம் தெரியாத சாதாரண நபர் ஒருவர் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அதே குரலில் மிகத்திறமையாக பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த பாடகர் சங்கர் மகாதேவன் அந்த நபரைப் பற்றிய தகவல்களை தனக்குத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், இவரை நான் எப்படி கண்டுபிடிப்பது? இவருடன் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பமாக இருக்கிறது. இவரைக் கண்டறிய எனக்கு உதவி தேவை எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒருவர் அப்பாடலை பாடிய நபரின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார்.