• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா!

June 30, 2018 தண்டோரா குழு

பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா(36). பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த இவர் தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்ததும் குடும்பத்தினர் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.இதனால், சொந்த ஊரான பரமக்குடியில் இருந்து வெளியேறிய அவர் செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் வசித்து வந்த மற்றொரு திருநங்கை ஆதரவு அளித்து வந்துள்ளார். இவர் பரமக்குடியில் பள்ளிப் படிப்பையும், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தவர். இதனால், வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடர அவர் விரும்பினார்.

எனினும், திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகே அந்தப் பணியில் இணைய வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் கடந்த 11 ஆண்டுகளாக காத்திருந்தார்.இந்நிலையில்,இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர் பணியை தொடர்வதற்காக பதிவு செய்யவுள்ளார். இதன் மூலம் இந்த பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சத்தியஸ்ரீ, இன்று வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.

மேலும் படிக்க