• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மத்திய சிறையில் கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

June 30, 2018 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்தார்.திருப்பூரை அடுத்த மடத்துக்குளம்,கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை மத்திய சிறையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்
நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஐந்து கைதிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க