• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

June 30, 2018 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்தார்.திருப்பூரை அடுத்த மடத்துக்குளம்,கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை மத்திய சிறையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்
நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஐந்து கைதிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க