• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னத்திரை நடிகை நிலானிக்கு நிபந்தனை ஜாமின்!

June 30, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீசை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது,காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அந்த வீடியோவில் காவல்துறை சீருடை அணிந்திருந்த அவர் காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருக்கிறது.துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை திட்டமிட்டு நடந்துள்ளது. இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளது என பேசியிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதைனையடுத்து வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்து,குன்னுாரில் கைது செய்தனர்.சைதாபேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலானியை ஜூலை, 5 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே,நிலானிக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்தார்.இந்நிலையில் நேற்று,இம்மனுவை விசாரித்த நீதிபதி நிலானிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க