• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவலராக பணிபுரியும் தந்தை மீது மகன்கள் புகார்

June 28, 2018

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ.இவருடைய மனைவியும் பேரூர் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ப்ரத்யூம்னா(15) மற்றும் ஹேமந்தரா(10) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் போத்தனூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட தந்தை செய்து கொடுக்க மறுப்பதாகவும்,சரியாக வீட்டிற்கு வராமலும்,குடும்பத்தை கவனிக்காமலும் இருப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு மகன்கள் வந்து புகார் மனு கொடுத்தனர்.

தந்தையின் இச்செயல்களால் என்னுடைய மனமும்,தனது தம்பியும் மனமும் மிகவும் பாதிக்கப்படைந்துள்ளதாகவும்,இதனால் படிப்பில் தங்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க