• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யகோரி மனு

June 27, 2018 தண்டோரா குழு

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மதுரை ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் சீனிவாசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் ராஜா சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,கடந்த 19ம் தேதி வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காவல்துறையினரிடம் மனு அளித்ததாகவும்,ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.எனவே, திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருக்கிறது.இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க