• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காருக்குள் புகுந்த இரும்பு ராடு!

June 26, 2018 தண்டோரா குழு

கோவையில் லாரியில் ஏற்றி சென்று கொண்டு இருந்த இரும்பு ராடு கார் மீது திடீரென விழுந்ததில் காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இரும்பு ராடு காருக்குள் சென்றது.காரின் பின் இருக்கையில் யாரும் பயணிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவையை அடுத்த ராம் நகர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளது.இந்த தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு ராடை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரும்பு ராடு ஒன்று லாரியில் இருந்து கீழே விழும் பொழுது அவ்வழியாக வந்த காரின் மீது விழுந்ததில் அந்த காரின் பின்பக்க ஐன்னல் உடைக்கப்பட்டு காருக்குள் இரும்பு ராடு சென்றது.இதனால் கார் சேதமடைந்தது.

இதனையடுத்து உடனடியாக காரை ஓட்டுனர் காரை நிறுத்தினார்.காரின் பின் பக்கம் யாரும் பயணிக்காததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.இந்த பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும்,பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுவதாக பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் வைத்தனர்.

மேலும் படிக்க