June 26, 2018
தண்டோரா குழு
ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் பகவான்.இவர் திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.இதனை அறிந்த அப்பள்ளி மாணவ,மாணவிகள் அவர் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அவரை விடாமல் கதறி அழுத காட்சி பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது.மேலும்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பகவான் தங்கள் பள்ளியை விட்டு செல்லக்கூடாது என மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில்,ஆசிரியர் பகவான் வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளியிலேயே பணியை தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.