• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மலை கிராம மக்களுக்கு விஜய் தான் எல்லாமே: துணை கலெக்டரின் வியப்பு பதிவு

August 10, 2016 தண்டோரா குழு

தமிழ்நாட்டுக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்களைக் கொண்ட மாநிலம் கேரளா. அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக திரையரங்குகளில் பல விஜய் படங்கள் வெளியாகி இருக்கிறது.

கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டராகப் பணிபுரிந்து வருபவர் உமேஷ் கேசவன். அவர் சமீபத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

அங்குச் சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை.

அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் விஜய் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அட்டப்பாடியில் தான் சமீபகாலமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் புகைப்படத்தையும் மாவோயிஸ்ட்கள் என்று வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க