• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை பேருந்து விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

June 22, 2018 தண்டோரா குழு

அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்துக்கு காரணமான பழுது அடைந்த பேருந்தை இயக்க கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்கு செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 14 ஆம் தேதி உதகை அருகே மாதாண்டா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் 4 பேரும் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் நீலகிரி மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்க சொன்னது தான் காரணம் என பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து விபத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விபத்திற்கு காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்க கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற்பொறியாளர், பொறியாளர் ஆகிய நான்கு அதிகாரிகள் மேல் கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இனி இதுபோல் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்து விட்ட நிலையில் இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறை இருந்திருந்தால் இவர்கள் மட்டுமல்ல தினந்தோறும் சிகிச்சையை இல்லாமல் பறிபோகும் எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற முடியும், அதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தது போல் உதகை அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவ கல்லூரிக்கு இணையாக நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க