• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுதலை

June 19, 2018 தண்டோரா குழு

சுங்கச்சாவடி,என்எல்சி முற்றுகை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விடுதலையானார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல் மற்றும் நெய்வேலி என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.இதன் பின் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்,கடலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றங்களில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.ஆனால்,அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து,வேல்முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜாமின் வழங்கிய நீதிபதி மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவில் கோட்டாறு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஆணையிட்டார்.சுங்கச்சாவடி,என்எல்சி முற்றுகை வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் இன்று விடுதலையானார்.

மேலும் படிக்க