• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருது விழாவை புறக்கணித்த முன்னணி நடிகர்களுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

June 18, 2018 தண்டோரா குழு

கடந்த காலங்களில் நடந்த திரைப்பட விழாக்கள்,விருது வழங்கும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டனர்.இவை தற்போது வியாபார நோக்கில் மாறியுள்ளன.இந்தப் பயனை நடிகர்,நடிகைகளும் பெற வேண்டும் என்று நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி,விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதார ரீதியில் பயன்பட்டால் நல்லது. இல்லையெனில் தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடைப் பெற்றால் சிறப்பு.அவ்வாறு இல்லையெனில் விழாக்களில் நடிகர்,நடிகைகள் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனையேற்று,ஐதராபாத் ஃபிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில்,நயன்தாரா,குஷ்பு சுந்தர், கார்த்தி,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.இந்நிலையில் அவர்களுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.இதன்மூலம் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவ முடியும்.இதனை அனைத்து திரைப்பட கலைஞர்களும் பின்பற்ற வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க