• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

June 15, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப்பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து கிளம்பியது.

இதற்கிடையில்,பேருந்து மந்தடாபேரின் பவிலாஸ் பகுதியில் செல்லும் போது பள்ளம் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர் ராஜ்குமார்,வலதுபுறமாக பேருந்தை திருப்பியுள்ளார்.அப்போது,எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த கோர விபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,விபத்தில் அடிபட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேருந்து நடத்துநர் பிரகாஷ் சிகிச்சை பலனின்று இன்று உயரிழந்துள்ளார்.

இதனையடுத்து,பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,29 பேர் பலத்த காயத்தோடு தீவிர சிசிக்கை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க