• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை:உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

June 14, 2018 தண்டோரா குழு

கோவையில் உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு,பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு இரத்த வங்கிகள் இணைந்து இதனை நடத்தினர்.

இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க