• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:தொடர் மழையால் ஐந்தாவது நாளாக குற்றாலம் அருவிக்கு செல்ல தடை

June 14, 2018 தண்டோரா குழு

கோவையில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது.வெள்ளப்பெருக்கின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிக்க ஐந்தாவது நாளாக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கோவை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று மாலை தொடர்ந்த மழை விடிய விடிய பெய்து வருகிறது.காலையிலும் விட்டு விட்டு கோவை மாநகரப் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும்,கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக ஐந்தாவது நாளாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் பத்து அடி உயர்ந்துள்ளது.மொத்த உயரமான 50 அடியில்,தற்போது 40 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் அணை விரைவில் நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க