• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு செல்ஃபிக்கு 38 ஆயிரம் ரூபாய் செலவு செய்த இளைஞர் !

June 13, 2018 தண்டோரா குழு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கார் முன்பு செல்ஃபி எடுப்பதற்கு 38 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , வடகொரிய கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் சந்தித்து பேசினர். பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்களை தாண்டி, உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர்களிடையேயான இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பை உலகமே எதிர்பார்த்தது. அதைபோல் இந்திய இளைஞர் மகாராஜ் சிங்கப்பூருக்கு ட்ரம்ப் வரும் போது அவருடன் செல்ஃபி எடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அதிபர் கிம் உடனான சந்திப்புக்கு ட்ரம்ப் காரில் வரும் வழியில் இந்திய இளைஞர் மகாராஜ் மோகன் செல்ஃபி எடுத்து அந்த புகைப் படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் பிரியரான மகாராஜ்மோகன் ஒரு செல்ஃபிக்காக சென்டோசா தீவில் உள்ள விடுதியில் 38,000 ரூபாய் செலவழித்து ஒருநாள் இரவு அறை எடுத்து தங்கியது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க