• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கன மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

June 13, 2018 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக செல்வபுரம் பகுதிகளில் வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. மேலும் அதன் கிளைகளான ராஜ வாய்க்கால்களிலும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுச்செல்வதால் ஆங்காங்கே சில இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதில் செல்வபுரம் சரோஜினி நகரில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது.ராஜ வாய்க்காளில் வரும் தண்ணீர் மூலம் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜ வாய்க்காலை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும், உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க