ஈரானில் நடைபெற உள்ள ஆசிய செஸ் போட்டியில்முகத்தை மூடும் உடையை அணிய வேண்டும் என்கிற ஈரான் அரசின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் சவுமியா சுவாமிநாதன் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
ஈரான் நாட்டின் ஹமதான் நகரில் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை ஆசிய நாடுகள் கலந்துக்கொள்ளும் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.இதற்கடையில்,இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,ஈரானிலும் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள வீராங்கனைகளுக்கு ஆடை கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இந்த ஆடை கட்டுப்பாட்டிற்குஉடன்பட இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில்,
“கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் அல்லது புர்கா அணிய வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை.கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் என ஈரானிய சட்டம் உத்தரவிடுவது கருத்து சுதந்திரம்,சிந்தனை சுதந்திரம்,மனசாட்சி மற்றும் மதம் உள்பட என்னுடைய அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது.இப்போதைய சூழ்நிலையில் என்னுடைய உரிமையை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நான் ஈரானுக்கு செல்லாமல் இருப்பது ஒன்று தான்,” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க செஸ் சாம்பியன் நாஸி பைய்கிடே பர்னஸ் தெக்ரானில் நடைபெற இருந்த போட்டியில் தலையில் முக்காடு அணிய மறுத்து போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்