• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ். வி. சேகரை கைது செய்ய அதிமுக அரசு தயங்குகிறது – ஸ்டாலின் குற்றசாட்டு

June 13, 2018 தண்டோரா குழு

எஸ்.வி.சேகரை கைது செய்ய அதிமுக அரசு தயங்குகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால்,எஸ்.வி.சேகர் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால்,20 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதியில்லை என தெரிவித்ததால்,எஸ்.வி.சேகர் பற்றி ஸ்டாலின் பேச சபாநாயகர் தொடர்ந்து அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

“தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால்,நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.சுதந்திரமாக அவரை வெளியே விட்டுள்ளனர்.நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டும் போலீஸ் துணையுடன் எஸ்.வி.சேகர் நடமாடுகிறார்” என கூறினார்.

மேலும் படிக்க