• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ரெட்டியை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டனா நானி பதில்

June 12, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.இவர் சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார்.

இதற்கடையில், தற்போது அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகரின் நானியும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி பிக் பாஸ்-2 நிகழ்ச்சியை நாணி தொகுத்து வழங்க இருந்ததால் பிக் பாஸ்-ல் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும், பல பெண்களின் வாழ்க்கையை நாணி அளித்ததாகவும் கூறியிருந்தார், இது தெலுங்கு சினிமாவின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

இந்நிலையில், நாணி ஸ்ரீ ரெட்டியின் இந்த புகாரை மறுத்துள்ளார், மேலும் இந்த சம்பவத்தால் ஸ்ரீ ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நானி தன் ஃபேஸ்புக் பக்கத்தில்,

“யாரெல்லாம் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களை டார்கெட் செய்து தொந்தரவுக்கு ஆளாக்குகிறார்கள். நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் வாழும் இந்தச் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் இதைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். என்மீது பழி சுமத்திய காரணத்தால் நான் அவர்மீது அவதூறு வழக்கு தொடரவிருக்கிறேன் ” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க