• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை

June 12, 2018 தண்டோரா குழு

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரி,கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினருக்கும்,காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரியும்,ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த கோரியும்,இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக அவ்வமைப்பினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது,இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க