• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்த போக்குவரத்து காவலர்

June 9, 2018 தண்டோரா குழு

மும்பையில் கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்த போக்குவரத்து காவலர் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடும் வெயில் விசி வந்த நிலையில் பருவமழைக்கு முன்பான கனமழை வருகிறது. இதனால் சாலையெங்கும் வெல்ல காட்சியானது. நேற்று இரவு பெய்த கனமழையால் கண்டிவ்லி அகுர்லி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நிண்ட வருசையில் நின்ற படிய நரகத் தொடங்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த நந்த்குமார் இங்லே(47) கொட்டும் மழையிலும் விடாமல் போக்குவரத்தை சரி செய்து வந்துள்ளார்.மேலும் அவர் பணியில் இருந்த போது பலத்த காற்று வீசியதால் சாலையில் இருந்த தடுப்புகள் காற்றுக்கு நகர்த்தி சென்றது. உடனே அவற்றையும் சரிசெய்து விட்டு போக்குவரத்தை சரிசெய்யத் தொடங்கினார்.

நந்த்குமார் இங்லே எந்த கவசமும் குடையும் இல்லாமல் கொட்டும் மழையில் தனது கடமையில் இருந்து தவறாமல் இரவு 11.30மணி வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியுள்ளர். அகுர்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் தனது போன், பர்ஸ் ஆகியவற்றை மற்றொரு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு தனது இடத்தை விட்டு நகராமல் வேலை பார்த்துள்ளார்.மும்பை காவல்துறையில் கடந்த 23 ஆண்டுகளாக, நந்த்குமார் இங்லே பணியாற்றி வருகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க