• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராட்சத பலூன் மூலம் இனி கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி

June 9, 2018 தண்டோரா குழு

உத்தரகாண்ட் மாநிலத்தின் அரசு பலூன்கள் உதவியுடன் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் இன்டர்நெட் வசதியை கிராமங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

மலைகள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், 680 கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்காத நிலை உள்ளது. இதைப் போக்க, வைஃபை மற்றும் போன் கால் வசதி அளிக்கும் சாதனங்கள் கொண்ட ராட்சத பலூன்களை நிலைநிறுத்த உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதற்கட்டமாக சோதனை முறையில் டேராடூனில் உள்ள ஐடி பூங்காவில் ஏரோஸ்டாட்ஸ் பலூன் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வில் அம்மாநில முதல்வர் திரவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டார். ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட, 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த பலூன் மூலம், ஏழரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கும். ஒரு பலூன் மூலம் வைஃபை வசதி அளிக்க 50 லட்சம் செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்கள் பறக்கும் இந்த ஏரோஸ்டாட்ஸ் பலூனில் உள்ள டிரான்சீவர் ஆண்டெனா (transceiver antenna) மூலம் போன்கால் வசதியும் வைஃபை மோடம் (Wi-Fi modem) மூலம் இன்டர்நெட் வசதியும் பெறலாம். மேலும் இந்த பலூனில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க