• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவுதி அரேபியாவில் வினோதமான முறையில் நடந்த பேஷன் ஷோ

June 9, 2018 தண்டோரா குழு

சவுதி அரேபியாவில் பெண் மாடல்களுக்கு பதிலாக டிரோன்களை பயன்படுத்தி பேஷன் ஷோ நடைபெற்றது.

சவுதி அரேபியாவில் இளவரசராக முகம்மது பின் சல்மான் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் பல அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பும் பெண்களுக்கென வாகன ஓட்டுரிமை வழங்கினார், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரத்தில் பேஷன் ஷோ நடத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் பேஷன் ஷோவில் புதிய ஆடைகளை அணிந்து பெண்கள் நடந்து வரக்கூடாது என அரசு தடைபோட்டது. பெண்கள் ஆடைகளை அணிந்து ஓய்யாரமாக நடந்து வருவது தானே பேஷன் ஷோ என அது இல்லாமல் எப்படி பேஷன் ஷோ நடைபெறும் என குழப்பதில் இருந்தனர்.

அப்போது வித்தியாசமான முயற்சியாக பெண்களின் ஆடைகளை டிரான் மூலமாக காற்றில் பறக்கவிட்டு விற்பனை செய்தனர். இந்த டிரான் மூலம் ஆடைகள் பறக்கவிட்டதால் மக்களிடையே சிறு பயம் இருந்தாலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடி இருந்த மக்கள் அதனை பார்த்து ரசித்தும் ஆடைகளை வாங்கிக்கொண்டும் சென்றனர்.

மேலும் படிக்க