• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச அளவிலான குதிரையேற்ற போட்டியில் சாதனை படைத்த கோவை மாணவர்கள்

June 7, 2018 தண்டோரா குழு

சர்வதேச அளவிலான குதிரையேற்ற போட்டியில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து கோவை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள் குதிரையேற்ற பயிற்சி பெற்று வருகின்றனர்.சிறு வயதிலேயே குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்ததன் காரணமாக சொந்தமாகவே குதிரையை வாங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பிறகு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று உள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் இந்த மூன்று மாணவர்களும் பங்குபெற்று ஆறு,ஏழாம் இடம் என சர்வதேச வீரர்களை பின்னுக்கு தள்ளி டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.

மேலும் படிக்க