• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப்பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி – மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு

June 7, 2018 தண்டோரா குழு

விருத்தாச்சலம் அருகே அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி(13).இன்று காலை வழக்கம் போல் பள்ளி சென்ற அவர்,பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கிய அவரை ஆசிரியர்கள் கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால்,அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க