• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசுத்தலைவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

June 7, 2018 தண்டோரா குழு

குடியரசுத்தலைவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காத பிரம்மா கோவில் அர்ச்சகரை கைது செய்யக்கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஸ்கரிலுள்ள பிரம்மா கோவிலை தரிசிப்பதற்காக குடியரசு தலைவர் தனது மனைவியுடன் சென்றார்.அங்கே ஜாதியை காட்டி குடியரசுத்தலைவரை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை.இதனால் அவர் கோவிலுக்கு வெளியே கற்பூரம் பற்ற வைத்து சாமி கும்பிட்டு சென்றுள்ளார்.இச்சம்பவம் தேசத்திற்கே அவமானம் எனக்கூறி திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாடத்தில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சகரை கைது செய்ய வலியுறுத்தியும்,அர்ச்சகர் உரிமை சட்டத்தை கொண்டுவர வேண்டியும் கண்டன கோசங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க