• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் விலை குறைப்பு குறித்த ஸ்டாலின் கேள்விக்கு – ஓபிஎஸ் பதில்

June 6, 2018 தண்டோரா குழு

கச்சா எண்ணெய்க்கான விலை சர்வதேச சந்தையில் குறைந்தால் மட்டுமே,பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெட்ரோல் மீதான அரசின் வரியை குறைத்தது போல,தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,

தமிழகத்தில்,பெட்ரோலுக்கு 34 சதவீதமும்,டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது.ஆந்திரா,தெலுங்கானாவை விட பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி தமிழகத்தில் குறைவு தான்.கேரளாவில் இருப்பதை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் குறைவு தான் என்றும் தெரிவித்தார்.

மேலும், விலை ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப மதிப்புக்கூட்டு வரியை மாற்ற முடியாது.கேரளாவில் மதிப்புக்கூட்டு வரிக்கு மேல் வரி கிடையாது ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை.இருப்பினும், மதிப்பு கூட்டு வரியை குறைப்பது குறித்து,முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

மேலும் படிக்க