• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேல்சிகிச்சைக்காக உதவி ஆய்வாளர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி

June 6, 2018 தண்டோரா குழு

பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த போது கத்தியால் தாக்கப்பட்ட கோவை பேரூர் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மதுக்கரை கே.ஜி.காலனி பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவரும் பழனி அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.இதனையடுத்து பேரூர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.அப்போது குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்த போது கையில் இருந்த கத்தியால் காவலர்களை தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து பழனியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர்,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க