• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேல்சிகிச்சைக்காக உதவி ஆய்வாளர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி

June 6, 2018 தண்டோரா குழு

பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த போது கத்தியால் தாக்கப்பட்ட கோவை பேரூர் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மதுக்கரை கே.ஜி.காலனி பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவரும் பழனி அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.இதனையடுத்து பேரூர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.அப்போது குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்த போது கையில் இருந்த கத்தியால் காவலர்களை தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து பழனியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர்,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க