• Download mobile app
09 Jul 2025, WednesdayEdition - 3437
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

June 5, 2018 தண்டோரா குழு

காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.

காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் காலா படம் திரையிடப்படும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதால் கர்நாடகத்தில் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.

இதற்கிடையில்,படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தை வெளியிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது.ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது.படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்.

காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம்.அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால்??? படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க