• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகையில் நடிகர் விவேக்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

June 5, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்றார்.இதனையடுத்து குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்காக உதகை காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு சென்றார்.அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர்.

தங்கள் பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் நாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.இதை சற்றும் எதிர்பாராத விவேக் தான் எந்த விதமான அரசியல் கட்சியை சாராதவன்,ஐயா அப்துல்கலாம் பணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன் அதனால் உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க