காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும்,எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் காலா படத்தின் புரோமோஷனுக்காக நேற்று ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
“காவிரி பிரச்னைக்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நடிகர் கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை,இது ஆரோக்கியமான ஒன்று.காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன்.அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல
ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள்.படத்தை தடைசெய்ய தேவகவுடா விடமாட்டார்.காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்தேன்.நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான்.நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா