June 4, 2018 தண்டோரா குழு
காளையை அடக்குங்கள் என்று சொன்னால் என்பாடு திண்டாட்டமாகிவிடும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் காமெடியாக கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது,
என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம்.ஜல்லிக்கட்டு பார்க்கும் போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.இதனால்,என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.