• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸிற்கு 22 மஜதவுக்கு 12 முடிவுக்கு வந்த இலாகா இழுபறி

June 1, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் இலாகா பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.முதலமைச்சராக குமாரசாமியும்,துணை முதலமைச்சராக பரமேஷ்வர ராவும் கடந்த வாரம் பதவியேற்றனர்.எனினும்,காங்கிரஸ்,மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியிடையே இலாக்கா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நீடித்ததால் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது. இதனைத்தீர்க்கும் விதமாக இன்று இரு கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

இதன்படி காங்கிரசுக்கு,உள்துறை,நீர்பாசனம்,சுகாதாரம்,பெங்களூரு நகர வளர்ச்சி,வருவாய்த்துறை ஊரக நகர்ப்புற வளர்ச்சி,வீட்டுவசதி,விவசாயம் மற்றும் பெண்கள்மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது.அதைபோல்,மதசார்பற்ற ஜனதா தளத்தின் வசம் நிதி,பொதுப்பணி,மின்சாரம்,கூட்டுறவு,கல்வி,சுற்றுலா,போக்குவரத்து துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது என முடிவு செய்யப்பட்டது.இதனையடுத்து வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

மேலும்,கூட்டணி அரசில் பிரச்னைகளை தீர்க்க கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும்,இதன் தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் ஒருங்கிணைப்பாளராக மஜத கட்சியின் டானீஸ் அலி செயல்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க