• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வியாபாரியிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற குரங்கு

May 31, 2018 தண்டோரா குழு

உத்திர பிரேதச மாநிலத்தில் மளிகை கடை வியாபாரியிடம் இருந்து குரங்கு ரூ. 2 லட்சத்தை பறித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரேதச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் விஜய் இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஊரில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து அவர் மகள் நான்ஸியிடம் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்தார்.

இதையடுத்து,இருவரும் வங்கியில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓடிவந்த குரங்கு சிறுமியின் கையில் இருந்த பணத்தை பறித்து சென்று ஓடியது.இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் அந்த குரங்கை துரத்தி சென்றார்.இதனை பார்த்த அந்த ஊர் மக்களும் குரங்கை துரத்தினர். ஆனால்,குரங்கு வேகமாக ஓடி ஒரு கட்டிடத்தின் மேல் உச்சியில் ஏறி அமர்ந்து பையில் இருந்த பணத்தை எடுத்து சுமார் ரூ.60 ஆயிரம் வரை கிழித்து எறிந்து விட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த குரங்கு,பையுடன் எடுத்து ஓடிவிட்டது.அந்த குரங்கிடம் இருந்து பணத்தை வாங்க வேண்டும் என அனைவரும் குரங்கின் பின் சென்றனர்.ஆனால் அந்த குரங்கு வேகமாக சென்று விட்டது. இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் விஜய் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் குரங்கை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க