• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

May 31, 2018 தண்டோரா குழு

கோவையில் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

பின்னர் புகையிலையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களும் மாணவர்களும் கையெழுத்திட்டனர்.இந்த கையெழுத்து இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புகையிலைக்கு எதிராக கையெழுத்திட்டனர்.மேலும் மருத்துவ மாணவர்கள் புகையிலை ஒழிப்பு குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்.

மேலும் படிக்க