• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி

May 30, 2018 தண்டோரா குழு'

அரசு பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் பட்டம் விட்டு விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

இதில் முதலில் இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஜோகோ உற்சாக வரவேற்பளித்தார்.இதனையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு,அறிவியல்,தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தீவிரவாத ஒழிப்பு உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.அதைத் தொடர்ந்து இன்று காலை போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களுக்கு மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்க இந்தோனேசியவுக்கு துணையாக இந்தியா இருக்கும் என்று தெரிவித்தார்.இதனையடுத்து ஜகர்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சிக்கு பிரதமர் மோடி ஜோகோ சென்றனர்.அப்போது அங்கு ஜோகோவுடன் இணைந்து பிரதமர் மோடியும் பட்டம் விட்டு விளையாடினார்.

மேலும் படிக்க