• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதியதாக சிம்கார்ட் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

May 30, 2018 தண்டோரா குழு

இந்தியா முழுவதும் பதஞ்சலி தயாரிப்புகள் இருந்த நிலையில் புதிதாக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம்கார்ட் ஒன்றை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பதஞ்சலி நிறுவனம் புதிதாக சுதேசி சம்ரதி என்கின்ற பெயரில் ஒரு சிம்கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம்கார்டு வாங்கி 144 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொண்டால் அளவில்லா அழைப்புகளும் 2ஜிபி இண்டெர்நெட் மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ள வசதிகள் கிடைக்கும்.

மேலும் இந்த சிம்கார்ட் வாங்கினால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வசதியும் உண்டு.மேலும் இந்த சிம்கார்ட் வாங்குபவர்களுக்கு பதஞ்சலி தயாரிப்பு பொருட்களில் 10% சலுகை வசதியும் உண்டு என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த சிம்கார்ட் பதஞ்சலி ஊழியர்களுக்கு மட்டும் வழங்கபட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் பொதுமக்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க